Skip to main content

புதுச்சேரி மாநில பட்ஜெட் தாமதத்திற்கு மத்திய அரசே காரணம்- முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாற்று!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது,

“சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணம் ஆதிதிராவிடர்களுக்கு 350 லிருந்து 1200 ஆகவும், பொது பிரிவினருக்கு 750 லிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி உதவி தொகையை படிப்படியாக குறைத்து வருவதால் மாணவ மாணவிகள் பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளனர்.

 

narayanasamy interview

 

 

ஜம்மு காஷ்மீரில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் மக்களிடம் கருத்துக்களை கேட்காமலேயே ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை போன்று 234 சட்ட விதி  அடிப்படையில்  சட்டப்பேரவை அமையும் எனவும், சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் மேற்பார்வையில் இருக்கும்  எனவும் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15-ஆவது சம்பள கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் இதுவரை மத்திய அரசும் அதற்கான முடிவும் எடுக்கவில்லை ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் 15-ஆவது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜனநாயக பேரழிவினை மத்திய அரசு செய்துள்ளது. இது மக்களின் அதிகாரத்தினை பறிக்கும் செயல்.

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் தர தாமதப்படுத்துவதால் பட்ஜெட் போட தாமதமாகிறது.

இவ்வாறு கூறிய நாராயணசாமியிடம், ‘ப.சிதம்பரம் தமிழகத்திற்கு பாரமாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே...? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழக முதல்மைச்சர் எடப்பாடி  ஒரு முதல்வர் போல் பேசவில்லை. அவர் பதவியை உணர்ந்து செயல்பட வேண்டும். மற்ற அரசியல் கட்சியினரை பற்றி அவர் பேசாமல் இருப்பது நல்லது” என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.