Skip to main content

கிரண்பேடி சம்பந்தமில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறார்- நாராயணசாமி பேட்டி!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாக கூட்ட அரங்கில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சனையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசியல்வாதிகள் பற்றியும், தமிழக மக்களை கோழைகள், சுயநலவாதிகள் என்றும் விமர்சித்துள்ளார். கிரண்பேடிக்கும், தமிழகத்துக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. தமிழர்களின் வீரம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனையை எழுப்பி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் பேசியுள்ளார். நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பி உள்ளார்.

narayanasamy interview!!


கவர்னர் கிரண்பேடி தான் வகிக்கும் பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். அவர் தனது சட்டப்படியான கடமையை மட்டும் செய்யவேண்டும். அதிகாரிகளை அழைத்து அவர் பேசலாம். ஆனால் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தெரியாமல் எந்த உத்தரவினையும் அவர் பிறப்பிக்கக் கூடாது. முடிவுகளையும் எடுக்கக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளது. அதை தீர்க்க அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.

மத்திய அரசு கடன் தள்ளுபடி, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதி, டெல்லியைப்போல் புதுச்சேரியிலும் ஓய்வூதியவர்களுக்கான தொகையை மத்திய அரசே வழங்கவேண்டும், புதுச்சேரிக்கு வழங்கப்படும் மானியத்தொகையை 26 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.