Advertisment

நெல்லிக்காயை போல சிதறுவார்கள்- நாஞ்சில் சம்பத்தின் விலகல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

நாஞ்சில் சம்பத்தின் விலகல் பற்றிய கேள்விக்கு இன்று செய்தியாளர்களுக்கு பதிலளித்தஅ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்,அதிமுக என்பது முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம். ஆனால் இதெல்லாம் ( டி.டி.வி புதிய கட்சி) ஒன்றாக கட்டிவைத்த நெல்லிக்காய் கீழே கொட்டினால் சிதறி ஓடுவார்கள் என கூறியுள்ளார். டி.டி.வி அணியில் இருந்து இன்னும்பலர் எதிர்காலத்தில் கீழே சிதறும் நெல்லிக்காயை போல சிதறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Advertisment

jayakumar

மேலும் காண்ணதாசனின் ''ஓகோ ஓகோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள், விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது'' என்ற பாடலையும் நினைவுபடுத்தி விளம்பரங்கள் வைத்து இவர்களால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

Advertisment
ttv dinakaran tab jayalalitha jayakumar tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe