Skip to main content

யாா் வந்தாலும் நாங்குநோியில் அடிப்படை வசதிகளை உருவாக்குவாா்களா?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

நாங்குநோி இடைத்தோ்தல் களம் அரசியல் கட்சியினரிடத்தில் சூடுபிடித்துள்ளது. அதே போல் வாக்களிக்க இருக்கும் மக்களும் சூடாக பேச தொடங்கியிருக்கிறாா்கள். நாங்குநோி தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் நீண்ட நாள் கோாிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

 

nanguneri people expectation

 

 

தென் மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய தொகுதிகளில் ஓன்றாக நாங்கநோி உள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அடிக்கடி நிகழும் ஜாதி கலவரங்களை தடுக்கும்  விதமாகவும், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கமிஷன், தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களை துவங்கினால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகாிக்கும். அதன் மூலம் ஜாதி கலவரங்களையும் குற்றச்சம்பவங்களையும் தடுத்து விடலாம் என கூறியது.

ஆனால் அரசு அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது? நாங்குநோி உயா் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வந்தது. அங்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக எந்த நிறுவனங்களும் வராமல் சிறு, சிறு நிறுவனங்கள் என சுமாா் 10 நிறுவனங்கள் தான் உள்ளது. அதுவும் சில நிறுவனங்களின் குடோன்கள் தான் செயல்படுகின்றன.

இதே போல் நாங்குநோியில் விவசாய நிலங்கள் அதிகம் இருக்கும் நிலையில், அங்கு பாசன வசதி குறைவு. இதனால் விளைச்சலும்  குறைவு விளையும் பொருளுக்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. களக்காடு, சேரன்மகாதேவி பகுதியில்  வாழை விவசாயம் அதிகம் நடக்கிறது. இங்கு வாழைத்தாா்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு அமைக்க பல ஆண்டுகளாக அந்த விவசாயிகள் கோாிக்கை வைத்து வருகின்றனா். அரசும் அங்கு தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகளும் வாழை போல் நிமிா்ந்து நின்று தாா் போல் தலையை கீழே தொங்க விட்டு நிற்கிறாா்கள்.

படித்த இளைஞா்கள் இங்கு அதற்கான வேலையில்லாததால் வெளியூா்களில் சென்று குறைந்த ஊதியத்தில் வேலைபாா்க்கிறாா்கள். அதே போல் நாங்குநோியிலே இளைஞா்கள் தொழில் தொடங்க அவா்களுக்கு வழி காட்டும் விதமாக அரசின் எந்த முயற்சிகளும் அங்கு இல்லை. விவசாய தொழிலை மேம்படுத்தினாலே போதும் அங்கு விவசாயம் தலை நிமிா்ந்து நிற்கும். 

இதே போல் அங்கு பெண்களுக்கான பிரதான தொழில் பீடி சுற்றுதல். இவா்கள் நேரடியாக கம்பெனி மூலம் இல்லாமல் ஓப்பந்த அடிப்படையிலே பீடி சுற்றி வருகின்றனா். இதனால் அவா்களுக்கு வேறு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் அந்த தொழிலும் நலிவடைந்து வருகிறது. மேலும் முக்கியமாக, கிராமங்கள் சூழ்துள்ள இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகவே உள்ளது.

இதையெல்லாம் பூா்த்தி செய்து, காலகாலமாக கனவு கண்டு வரும் நாங்குநோி தொகுதி வாசிகளுக்கு அதை நனவாக்க வேண்டும். வழக்கம் போல் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினரின் ஓயாத வாக்குறுதியாக தான் இந்த முறையும் இருக்குமா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.