நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
நாங்குநேரி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளருக்கு ரூபாய் 2,000 வழங்க வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், குண்டர்களால் மக்கள் அச்சத்துடன் உள்ளார். இதனால் நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.