Skip to main content

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை!- மு.தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடம், களக்காடு பகுதியில்  கேசவநேரி என்ற ஊரை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்றுள்ளனர். அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம், கட்சி அரசியலை தாண்டி பொதுமக்கள் மனு கொடுப்பதும், கோரிக்கை வைப்பதும் இயல்பானது. ஏனெனில், அனைவரின் வரிப்பணத்திலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் போகிறது.
 

எனவே அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இந்நிலையில் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்ற, கேசவ நேரி ஐமாத்தினரைப் பார்த்து, "மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யனும்? என கேட்டிருக்கிறார். அத்தோடு, காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்றும் திமிராக பேசியிருக்கிறார். யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பது கூட தெரியாமல்  அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு நாவடக்கம் தேவை.

nanguneri by election minister rajendra balaji speech tamimun ansari mla condemns



பொதுவாக கடந்த 3 வருடங்களாக அவர் அளிக்கும் பேட்டிகள் நகைச்சுவை நடிகரை மிஞ்சும் வகையிலேயே இருக்கிறது என பலரும் சொல்வதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மக்கள் சேவை என்பது வாக்கு அரசியலை கடந்தது. ஒட்டுப்போட்டவர்கள், எதிர்த்து ஒட்டுப்போட்டவர்கள், மாற்று கருத்துடையவர்கள் என எல்லோருக்கும் சேவை செய்வது தான் நேர்மையான அரசியலாகும். அரசியலில் வாழ்வுரிமை கோட்பாடுகளை புதைத்து விட்டு, எல்லோரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்த கட்சியும், எந்த வாக்காளரையும் நிர்பந்திக்க முடியாது.
 

இதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களின் பேச்சு, அதிமுக வின் கொள்கைக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், அவரை அதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பொறுப்பற்ற முறையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை நிறுத்திக் கொள்வது, அவரது அரசியலுக்கு நல்லது என்பதையும் நல்லெண்ணத்தோடு சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.