Skip to main content

நாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

திருச்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடும் போதே ஒரு வீடோடு சேர்ந்து ஒரு அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக புதுக்கோட்டையில் இருந்த கட்சியினர் அனைவரும் திருச்சியில் சல்லடையாக தேடினார்கள். கடைசி வரை வீடோடு சேர்ந்து தேர்தல் அலுவலகம் கிடைக்காத நேரத்தில் அரிஸ்டோ ஓட்டல் அருகே பஸ் டிப்போ அருகில் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. 

அதன் பிறகு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் நிரந்தரமாக தேர்தல் அலுவலகம் திறக்க வேண்டும் என்று கட்சியினர் இடையே பெரிய எதிர்பார்பு இருந்தது. ஆனாலும் திருநாவுக்கரசர் என்ன நினைத்தாரோ திருச்சி வரும் பொழுது எல்லாம் வழக்கம் போல் பெமினா அலுவலகத்திலே தங்கியிருந்தார்.
 

இதற்கு இடையில் திருச்சியில் உள்ள ஒரு அமைப்பினர் எங்கள் ஊர் எம்.பி.யை காணவில்லை என்று அரியமங்லம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அதன் பிறகு அது பெரிய பிரச்சனையாக மாறியது. அதற்கு அடுத்த சில வாரங்களிலே தென்னூர் அருகில் புதிய அலுவலகத்தை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

nanguneri assembly congress party mp thirunavukkarasar trichy  press meet



அலுவலக திறப்பு விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய, திருநாவுக்கரசர் எம்.பி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குனேரி பொறுத்த வரையில் அது காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி முடிவு பண்ணுவோம் என்றார்.
 

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்கிற விவாதம் இரண்டு கட்சியினர் இடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் நாங்குனேரி காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடம் கேட்போம் என்று திருநாவுக்கரசர் பேசியிருப்பது. உள்ளாட்சியில் கூட்டணியுடன் இருப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருப்பதும். காங்கிரஸ் கட்சியில் உள்ளாட்சியில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு இது சந்தோஷத்தை கொடுத்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.