Skip to main content

இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்- கனிமொழி பிரச்சாரம்.

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

நாங்குநேரி இடைத்தேர்தலில் முதன் முதலாகப் பிரச்சாரத்தைத் துவக்கினார் தி.மு.க.வின் எம்.பி.யான கனிமொழி. இன்று தொகுதிக்குட்பட்ட களக்காடு நகரில் தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த கனிமொழி கூட்டணியின் வேட்பாளரான ரூபி மனோகரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அது சமயம் வேட்பாளர் ரூபி மனோகரன் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர், தி.மு.க.வினர் என திரளாக வந்திருந்தனர். பிறகு தேர்தல் பரப்புரை நடத்திய கனிமொழி.

nanguneri assembly by election dmk kanimozhi mp start the election campaign

இது மிக முக்கியமான இடைத்தேர்தல் அன்னை சோனியா, தளபதியின் ஆசி பெற்ற வேட்பாளர் ரூபி மனோகரனை எனக்கு நீண்ட நாளாகவே தெரியும். மக்களுக்கு உதவுபவர், எளிமையானவர். அவர் மக்களுடனேயே உங்களிடையே இருப்பார். உங்களுக்குத் தேவையானதை நிச்சயம் செய்வார். இடைத்தேர்தல் என்றதும் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எல்லோரும் இங்கே வருவார்கள். 
 

இதற்கு முன்பாக இது போன்று இங்கே இவர்கள் வந்தார்களா? மக்களின் தண்ணீர் பிரச்சினை, ரேசன் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்களா. எந்தப் பிரச்சினைகளைத்தான் தீர்த்து வைத்தார்கள். இந்த ஆட்சியில் எந்த ஒரு தொழிலையாவாது கொண்டு வந்தார்களா? யாருக்காவது வேலை கொடுத்திருக்கிறார்களா. வீட்டுக்கு வீடு படித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் அதிகம். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டதா வெளிநாடு தொழில் முதலீடுகள் வரும், வரும், என்று சொல்கிறார்கள். அதற்காகத் தான் தளபதி ஸ்டாலின் வெள்ளை  அறிக்கை கேட்கிறார்.

nanguneri assembly by election dmk kanimozhi mp start the election campaign

தலைவர் கலைஞர் ஆட்சியில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. அவர் வெளி நாடெல்லாம் செல்லவில்லை. ஆனா வெளிநாடு தொழில் முதலீடுகள் தமிழகத்தைத் தேடி வந்தது. இங்கேயுள்ள பச்சையாறு, கொடுமுடி ஆறு, ராமநதி, கடனாநதி, அடவிநயினார் அணை போன்ற அணைகள் அனைத்தும் கலைஞர் கொண்டு வந்தது. இவர்கள் எதையாவது செய்தார்களா? இந்தியில் படித்து இந்தியில் பரீட்சை எழுதினாத்தான் வேலையாம். நமக்குக் கிடைக்கிற வேலை வாய்ப்பையல்லாம் அவங்க தட்டிப் பறிச்சிட்டுப் போறாங்க. இதை தட்டிக் கேட்டதா இந்த அரசு. ஆனா நீட்  தேர்வக் கொண்டு வந்து தமிழ் நாட்ட முடக்கிட்டாங்க. இந்த அரசு கேக்கல. இன்றைக்கும் வெளிநாட்டுல, இங்க பிரபலமா இருக்குற தமிழக டாக்டர்களெல்லாம் நீட் பரீட்சையா எழுதுனாங்க. நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வரும் தளபதி ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார். இந்தத் தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.