Skip to main content

கூட்டணிக்குள் கலகம்...நாங்குநேரியில் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ்?

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், இரு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுவதாக முடிவெடுத்த நிலையில், "நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.!" என திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் கட்சி அதிரடியாக தீர்மானத்தை இயற்றியுள்ளதால் கூட்டணிக்குள் கலகம் பிறந்திருக்கின்றது.

nanguneri assembly by election congress and dmk congress state president ks azhagiri

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் நாங்குநேரியின் சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார், கன்னியாகுமரிப் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 5- ஆவது முறையாக கூட்டணிக் கட்சிக்காக மட்டும் இத்தொகுதியை ஒதுக்கி வந்த திமுகவோ, இந்த முறை கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு தொகுதியினை விட்டுத்தராமல் 1991- க்கு பிறகு இந்த முறை தாங்களே நேரடியாக போட்டியிடுவுள்ளதாக தகவல் கசிந்தது. இத்தொகுதியில் திமுக இளைஞரணிப் போட்டியிடலாம் என உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்குப் போட்டியாக திமுகவே களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

nanguneri assembly by election congress and dmk congress state president ks azhagiri


இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நெல்லை மாவட்ட செயல்வீரர்களுக்கானக் கூட்டம் நாங்குநேரி ரயில் நிலையம் அருகிலுள்ள சுப்புலட்சுமி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய கருத்தைத் தெரிவித்த நிலையில், கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, " தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி, அதனை மேலும் பலத்தபடுத்தவே இந்த கூட்டம்.

nanguneri assembly by election congress and dmk congress state president ks azhagiri


நாம் 50 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருப்பது ஏன்? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி பலம் இருந்தும் கூட ஏன் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா?  கூட்டணி இன்றி வெற்றி  பெற முடியாதா என்பதற்காக தான் இந்த கூட்டம்" என காங்கிரஸ் இத்தொகுதியில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேரடியாகவே தெரிவித்தார். ஏறக்குறைய திமுக இந்த தொகுதியில் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே.எஸ்.அழகிரியின் கூட்டணிக்குள் கலகம் விளைவிக்கும் பேச்சு என்பது பல அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.