Skip to main content

எட்டு வருட ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

நாங்குநேரி இடைத்தேர்தலின் பொருட்டு தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்பரைக்காக வந்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜாவும் வந்திருந்தார். பாளை யூனியனுக்குட்பட்ட திருவேங்கடநாதபுரம் மற்றும் கீழப்பாட்டம் ஆகிய கிராமங்களில்  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களிடம் பேசியதாவது,
 

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கு நல்ல எழுச்சி மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தி.மு.க. அங்கு வெற்றியடைவது உறுதியாகி விட்டது. தமிழகத்தின் முதல்வர் பெயர் என்ன என்பது பல மக்களுக்கு தெரியவில்லை. எட்டு வருட அ.தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத நிலை இந்த ஆட்சியில் உள்ளது.

NANGUNERI ASSEMBLY BY ELECTION CAMPAIGN DMK UDHAYANIDHI STALIN


அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மக்களை கவனிக்கவில்லை என நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் மிகப்பெரிய சவுக்கடி வழங்கினார்கள் அதற்கு பயந்து தமிழகத்திற்கு மோடி வரவே இல்லை. கடைசியாக மோடி வேட்டி கட்டி வந்தார். இந்த இடைதேர்தலால் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியாது. எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்போகிறது. நீட் தேர்வால் டாக்டராக வேண்டிய அனிதா தற்கொலை செய்து கொண்டார். முதல்வருக்கு டாக்டர் பட்டம் தேவையானதா? இதற்கெல்லாம் பாடம் புகட்ட இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய செய்யவேண்டும் என்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.