தமிழகசட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. விருப்ப மனுவை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 03.00 மணிக்குள் தலைமை அலுவலத்தில் வழங்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

nanguneri and vikkiravandi assembly byelection application form issued admk start now

Advertisment

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் விருப்ப மனு. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர். லட்சுமணன் விருப்ப மனு.இதனிடையே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.