Skip to main content

மாணவி நந்தினி கைது!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

 

 

nandhini

சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். 
 

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்டார். இதனையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரையும் அவரது தந்தை ஆனந்தனையும் போலீசார் கைது செய்தனர். 
 

அப்போது நந்தினி, கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை போலீசாரை மிரளவைத்த மதுரை சகோதரிகள்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Madurai sisters who the Chennai police!

 

மத்திய-மாநில அரசுளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்துவது, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நந்தினியின் வழக்கமாக உள்ளது.  சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே, மதுக்கடைகளை மூட வேண்டும் என, தனது தந்தையுடன் சேர்ந்து பலமுறை போராட்டம் நடத்தியவர் நந்தினி.  

 

இவரும் இவருடைய தங்கை நிரஞ்சனாவும், கடந்த 13ம் தேதி தேனி பேருந்து நிலையத்தில், “பிரதமர் மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படுகிறது.  அவர்களது வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்” என்று கூறி துண்டுப்பிரசுரம் விநியோகம்  செய்தனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தொண்டர்கள்  அங்கே கூடி போராட்டம் செய்ததால், பரபரப்பு நிலவியது. போலீசார்  தலையிட்டு நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் 20-ம் தேதி காலை,  நந்தினியும் நிரஞ்சனாவும் மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டதை மோப்பம் பிடித்த போலீசார், உடனடியாக  ‘அலர்ட்’செய்தனர்.  எதிர்பார்த்தது போலவே, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட இருவரும் புறப்பட்டனர்.

 

அவர்களை முன்கூட்டியே மறித்த மாம்பலம் போலீசார், நேராக எழும்பூர்  ரயில் நிலையம் அழைத்துச் சென்று, மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.  அதிலும், ரயில் புறப்படுகிற நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதாகக் கூறி, நிரஞ்சனா கீழே இறங்கியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி ரயிலில் ஏற்றிவிட்டனர்.   ரயில் கிளம்பியபிறகே ‘அப்பாடா’ என காக்கிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

 

 

Next Story

மோடி மதுரை வருகை... சமூக ஆர்வலர் நந்தினிக்கு வீட்டுச்சிறை!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Modi's visit to Madurai ... Home arrest for social activist Nandini!

                                                                   கோப்புப்படம் 

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

இந்நிலையில், அடுத்தபடியாக நாளை மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். மோடி வருகை காரணமாக சமூக ஆர்வலரான நந்தினி மற்றும் அவரது கணவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சமூக ஆர்வலரான நந்தினி 'டாஸ்மாக்', 'நீட்' தேர்வு ஆகியவற்றை எதிர்த்தும் மத்திய அரசையும், மோடியையும் எதிர்த்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.