Skip to main content

மாணவர்கள் தங்கவே லாயக்கற்ற நந்தனார் பள்ளியின் விடுதி!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.  தமிழக அளவில் இந்தத் துறையிலே பெரிய பள்ளியாக இது செயல்பட்டு வருகிறது.  கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சாமி சகஜானந்தா ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டும் தான்  முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.

 

 Nandanar School Hostel

 

அந்தக் காலகட்டத்தில் அதிக பள்ளிகள் இல்லாததால் நந்தனார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை  ஆயிரகணக்கில் இருந்தது. நந்தனார் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? என்ற நிலையில் ஒருங்கிணைந்த தென்னார்காடு மாவட்டமாக இருந்தபோது பல ஆயிரம் ஏழை மாணவர்கள்  இந்த பள்ளியில் கல்வி பயின்றுள்ளனர். அப்படி கல்வி பயின்றவர்கள் தற்போது தமிக அளவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயரிய பதவிகளில் உள்ளனர்.

அந்தநிலையில்  மாணவர்கள் தங்கி கல்விகற்க வசதியாக பள்ளியின் அருகே விடுதி அமைத்து தரவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரிடம், ஒருங்கினைந்த சிதம்பரம் எம்எல்ஏவாக இருந்த சாமி சகஜானந்தா கோரிக்கை விடுத்தார்.  இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த காமராஜர் 1956-ஆம் ஆண்டு நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வசதியுடன் இரண்டு அடுக்கு விடுதி  65 அறைகளுடன் கட்டப்பட்டது.  

 

 Nandanar School Hostel


இந்த விடுதியில் கடந்த 1995-ஆம் ஆண்டுவரை  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று உள்ளனர். அதனைத்தொடர்ந்து விடுதியை அரசு சரியாக பராமரிக்காததால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது மாணவர்கள் 300 பேர் மட்டுமே தங்கி வருகிறார்கள்.  அதுவும் பலபேர் விடுதியின் கட்டிடம் மிகவும் பழுதாகி உள்ளதால் தங்க முடியாத சூழலில் இரவு நேரத்தில் 200 பேர் மட்டுமே தங்குவதாக கூறுகின்றனர்.  விடுதியின் உள்ளே மாணவர்கள் தங்கும் அறைகள், மேற்கூரையின் காரைகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது மேற்கூரையின் காரைகள் இடிந்து விழுமோ என்ற பயமும் மாணவர்கள் மத்தியில் உள்ளது.

மேலும் மாணவர்கள் தங்கும் அறைகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் உடைந்துள்ளது. மழைநேரங்களில் மேல்தளத்தில் உள்ள அறைகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே வந்து கீழ்தளத்தின் அறையில் கசிவு ஏற்படுகிறது. எனவே இது மாணவர்கள்  தங்கவே தகுதியில்லாத கட்டிடமாக உள்ளது என்று விடுதி மாணவர்கள் கூறுகிறார்கள்.

இதகுறித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் விடுதி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் விடுதியின் கட்டிடம் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதிய விடுதி கட்டிகொடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது விடுதிகட்டிடத்தின் சில கட்டுமான பணிகளை மட்டும் செய்து வர்ணம் பூசி பல லட்சங்களை செலவு செய்ததாக கணக்கும் காட்டியுள்ளனர். இதேபோல் பலமுறை இந்த விடுதியை சீர் செய்வதாக பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

 

jj

 

மேலும் இதுகுறித்து விடுதி மாணவர் ஒருவர் கூறுகையில் 65 அறைகள் உள்ள விடுதியில் 20 அறைகள் தான் பயன்படுத்தமுடிகிறது. அதிலும் சில அறைகளின் மேற்கூறையின் சிமண்ட் காரை இடிந்து விழுந்துள்ளது. மீதி காரைகள் எப்போது விழுமோ என்ற பயத்தில் தினமும் தூங்கி எழுகிறோம். கடந்த 10 தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது எதுவுமே விடுதியில் சரியில்லை என்று விடுதி காப்பாளரை பணிநீக்கம் செய்துள்ளார். அரசு சரியான முறையில் விடுதியின் கட்டிடத்தை பராமறிக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதி மாணவர்களுக்கு கழிவறை வசதிகள் கூட கிடையாது மாணவர்கள் அனைவரும் திறந்த வெளியே பயன்படுத்தி வந்தோம். ஆட்சியர் ஆய்வுக்கு பிறகு விடுதி காப்பாளர் பழனி 15 ஆயிரம் செலவு செய்து விடுதியின் உள்ளே கழிவறை வசதி செய்து கொடுத்துள்ளார்.  அந்த கழிவறையின் மேல்தள சிமண்ட் காரைகள் எப்போ இடிந்து விழுமோ என்ற நிலையில் தான் உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்த கட்டிடத்தை மாணவர்கள் தங்குவதற்கு லாயக்கற்ற கட்டிடமாக அறிவித்து 500 பேர் மட்டும் தங்கும் அளவிற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதி கட்டிடத்தை கட்டிகொடுக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

 Nandanar School Hostel


இதுகுறித்து நந்தனார் ஆண்கள்  பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி காப்பாளர் (பொறுப்பு) குகநாதன் கூறுகையில், இந்த கட்டிடம் கட்டி 62 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கட்டிடத்தின் பல பகுதிகள் சிதிலம் அடைந்துள்ளது. மாணவர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அரசு சார்பில் 30 அறைகள் கொண்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். தற்போது கல்வி பயிலும் கட்டிடத்தை தற்காலிக விடுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதேபோல் நந்தனார் பள்ளியின் வாளகத்தில் தொடக்கபள்ளி இரண்டு தளத்துடன் இயங்கி வந்தது. அந்த கட்டிடமும் மிகவும் சேதமடைந்ததால் அருகில் ஒரு சிறிய கட்டிடத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இதனை அரசு ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை. கட்டிடம் தானக இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வர்கள். மேலும் பள்ளி வளாகத்தில் தேவையற்ற கட்டிடங்கள் பல உள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக மாற்றவேண்டும் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.