நந்தனம், வளசரவாக்கம் வீடுகளிலும் தொடரும் சோதனை! (படங்கள்)

வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தற்போது நந்தனம் எக்ஸ்டென்ஷன் ரோடு, வெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் வளசரவாக்கம், பெத்தானியா சாலையில் உள்ள விஜயபாஸ்கரின்உறவினர் வீடு மற்றும் மந்தைவெளி ராஜா தெருவில உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திலும் சோதனையானது நடைபெற்றுவருகிறது.

C. Vijayabaskar raid
இதையும் படியுங்கள்
Subscribe