Skip to main content

இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்! 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

நாமக்கல் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். 


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (27). நாமக்கல் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுடன் ஒரே வீட்டில் அனிதாவின் தந்தை கருப்பசாமியும் (50) வசித்து வருகிறார்.


கடந்த அக்.14ம் தேதி இரவு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், விமல்ராஜின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த விமல்ராஜையும், அனிதாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் மற்றொரு அறையில் படுத்திருந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் வெட்டிவிட்டு ஓடினர். கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கருப்பசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

namakkal young couple incident court surrender police investigation


நாமக்கல் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் எலக்ட்ரானிக் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வரும் நிக்கல்சன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்துதான் இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. 


கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண், கோவையில் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருகிறார். அவரும் நிக்கல்சனும் நெருக்கமான நண்பர்கள். இந்தப்பழக்கத்தில் நிக்கல்சன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அவருடைய மனைவிக்கும் அருணுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நிக்கல்சன் அருணுடன் முன்பே தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, நிக்கல்சனின் மனைவி திடீரென்று மாயமானார். தனது மனைவியை அருண்தான் கடத்தி வைத்திருப்பதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

namakkal young couple incident court surrender police investigation


இதற்கு பழிதீர்க்காமல் விட மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அருணின் மீதுள்ள ஆத்திரத்தில் அவருடைய தங்கை அனிதா, கணவர் விமல்ராஜ் ஆகியோரை கூட்டாளிகளுடன் சென்று வெட்டி கொன்றுள்ளார். நிக்கல்சனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் சரணடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய நிக்கல்சனின் கூட்டாளிகளான நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 'பழக்கடை' ரகுவரன் (28), கோபி (23) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். விரைவில் நிக்கல்சனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வரும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.