Skip to main content

நாமக்கல்லில் தொடங்கி புதுக்கோட்டையில் பொறி வைத்துப் பிடித்த கஞ்சா பண்டல்கள்... தொடரும் விசாரணை...

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

Pudukkottai

 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 50 கிலோ கஞ்சாவுடன் ஆறுமுகம் என்பவரை போலிசார் கைதுசெய்து ரகசிய விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தான் தனக்கு கஞ்சா வருவதாகக் கூறியுள்ளார்.

 

இந்தத் தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான குழுவினர் ஆறுமுகத்தை 'பொறி'யாகப் பயன்படுத்தி 'தனக்கு மேலும் 200 கிலோ கஞ்சா வேண்டும் புதுக்கோட்டையில் வந்து வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கிறேன்' என்று பேச வைத்துள்ளனர்.

 

ffff

 

தொடர்ந்து கஞ்சா பண்டல்கள் மாற்றப்பட வேண்டிய இடங்களையும் உறுதி செய்து கொண்ட நாமக்கல் போலிசார், புதுக்கோட்டை வந்து வெள்ளனூர் காவல் சரகத்தில் உள்ள சிப்காட் அருகே ஒரு டாடா ஏ.சி.இ வாகனத்துடன் ஆறுமுகத்தை காத்திருக்கச் சொல்லிவிட்டு போலிசார் மறைந்திருந்தனர். 

 

ஆறுமுகம் சிப்காட்டில் வந்து காத்திருப்பதை உறுதி செய்து கொண்ட புதுக்கோட்டை நபர், ஃபோர்டு காரில் கஞ்சா பண்டல்களை ஏற்றிக் கொண்டு வந்து ஆறுமுகம் காட்டிய டாடா ஏ.சி.இ வாகனத்தில் மாற்றிக் கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலிசார் மடக்கிப் பிடித்து 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா வியாபாரியான அரிமளம் அருகில் உள்ள சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த பத்பநாபன் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 49) என்பவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

dddd

                                                                             ஆரோக்கியதாஸ் 

 

ஆரோக்கியதாஸிடம் செய்த விசாரனையில் ஆந்திராவிலிருந்து வாங்கி வந்த கஞ்சா பண்டல்களை திருமயம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மனைவி மாரிக்கண்ணு (வயது 45) என்பவர் வீட்டில் பல நாட்களாக பதுக்கி வைத்திருந்து, தற்போது எடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக மாரிக்கண்ணுவும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.

 

ஆனால், ரகசியமாக வந்த நாமக்கல் போலிசார் ரகசியமாகப் பிடித்துக் கொண்டு நாமக்கல் சென்றுள்ளனர். தகவல் அறிந்து புதுக்கோட்டை போலிசார் விசாரணைக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

 

Ad

 

கிழக்கு கடற்கரை வழியாக கஞ்சா, தங்கம் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் இந்த கஞ்சாவும் கடற்கரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததா? என்றும் மேலும் இவர்களுடனான தொடர்புகள் குறித்தும் புதுக்கோட்டை மாவட்ட போலிசார் ரகசிய விசாரனை செய்து வருகின்றனர். சரியான விசாரணைக்குப் பிறகு கடலோரத்தில் மொத்தமாகவும் சில்லரையாகவும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் பெண் உள்பட பலர் சிக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

 

மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் இளைஞர்களைச் சீரழித்த போதை மாத்திரை, போதை ஊசி விற்ற கும்பலை சங்கிலித் தொடர் போல சென்று பலரை கைது செய்து ஏராளமான இளைஞர்களைக் காப்பாற்றினார். அதே போல, தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கஞ்சா கும்பல் நெட்வொர்க்கை முழுமையாகப் பிடித்து கஞ்சா இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டையை மாற்றுவார் என்கிறார்கள் போலிசார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.