Skip to main content

பள்ளி வளாகத்திலேயே தகாத உறவு... ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

நாமக்கல் அருகே பள்ளி வளாகத்தில் சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவில் பள்ளி ஆசிரியரே ஈடுபட்டதாக கூறி ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். 

நாமக்கல் மாவட்டம் அடுத்த எஸ். உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியராக  புதன்சந்தையை சேர்ந்த சரவணன், கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. 

NAMAKKAL PRIMARY GOVT SCHOOL TEACHER SARAVANAN ILEGAL ACTIVITIES , PEOPLES AND PARENTS


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஜெயந்தியும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

NAMAKKAL PRIMARY GOVT SCHOOL TEACHER SARAVANAN ILEGAL ACTIVITIES , PEOPLES AND PARENTS

அதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆசிரியரும், அங்கன்வாடி பொறுப்பாளரும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து வந்த, ஊர்பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அத்துடன் கல்வி அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்து, பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், இத்தகைய ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

''வைட்டமின் டி வேணாமா? வெயிலுக்கு வாங்க...''-செல்லூர் ராஜு கலகலப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 "Don't you want vitamin D.. to get sun..."-Sellur Raju Kalakalappu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், வெயிலுக்காக பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளைப் பார்த்துப் பேசுகையில், ''நாங்க எல்லாம் வெயிலில் இருக்கிறோம். நீங்கள் மட்டும் நிழலில் இருக்கலாமா... இதெல்லாம் நியாயமாப்பா... வாங்கப்பா உடம்புக்கு வெயில் நல்லதுமா. இந்த நேரத்துல வைட்டமின் டி கூடும். என்ன டாக்டர் ''எனச் சொல்ல, அருகில் இருந்த சரவணன் தலையை ஆட்டினார். அதன் பிறகு பேசிய செல்லூர் ராஜு, 'எம்.எஸ் படிச்ச டாக்டரே சொல்லிவிட்டார் வாங்க வெயிலுக்கு'' என்றார்.

அதே பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் அதுவரை நடனமாடுங்கள் எனச் செல்லூர் ராஜு சொல்லிவிட்டார். உடனே 'கள்ளழகர் வாராரு' பாடல் போடப்பட்டது. அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.