Skip to main content

புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து பழைய ஆண் நண்பருக்கு தீவைத்த பெண்! 

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Namakkal police arrested two include woman

 

ராசிபுரம் அருகே, புதிய ஆண் நண்பருடனான தொடர்பைத் துண்டிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் பழைய ஆண் நண்பரை, புதிய நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற பெண் உள்பட இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே தட்சன்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு சேகோ ஆலையில் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி காவியா (33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக காவியா, கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். இந்நிலையில், அதே ஆலையில் பணியாற்றிவரும் கணேஷ் (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காவியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்திவருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த காவியாவின் உறவுக்காரரான குமார் (40) என்பவர் காவியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் அவர்கள் இருவரிடையே நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில், ஈரோட்டில் உள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு, காவியா வீட்டுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவிட்டார். 

 

குமாருடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து, கணேஷுடன் பழகுவதை காவியா தவிர்த்துவந்தார். இது தொடர்பாக கணேஷ் கேட்டபோது, குமாரை தனது உறவினர் என்றும், தொழில் தொடர்பாக இந்த ஊரில் தங்கியிருக்கிறார் என்றும், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருக்கிறார்.

 

இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதியன்று காவியாவை தேடிச்சென்ற கணேஷ், அங்கு அவரும் குமாரும் ஒன்றாக நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர், காவியாவிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

இனியும் கணேஷை விட்டுவைத்திருந்தால் நிம்மதியாக இருக்கவிட மாட்டார் என்று கருதிய காவியா, புதிய ஆண் நண்பரான குமாருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதியன்று வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டிருந்த கணேஷ் மீது குமாரும், காவியாவும் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்தனர். 

 

உடலில் தீப்பிடித்ததால் அலறித்துடித்த கணேஷ், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டார். ஆனால் அதற்குள் அவருடைய உடல் முழுவதும் தீ பரவி, பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வெண்ணந்தூர் காவல் நிலைய காவல்துறையினர், காவியா, குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.