Skip to main content

நாமக்கல்: கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் வருமான வரித்துறை சோதனை; 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

நாமக்கல் அருகே உள்ள கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்திற்குச் சொந்தமான 17 இடங்களில் மூன்று நாள்களாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில், அப்பயிற்சி மைய இயக்குநர்கள் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கணக்கில் வராத 30 கோடி ரூபாய் ரொக்கமும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் நகரில் கிரீன் பார்க் என்ற பெயரில் சுயநிதி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் கடந்த காலங்களில் மாநில, மாவட்ட அளவில் தொடர்ந்து தகுதி பெற்று வருவதோடு, கணிசமானோர் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளிலும் இடம் பிடித்து வருகின்றனர்.

 

 Namakkal: Income Tax Department Test at Green Park Neet Training Center; 150 crore tax evasion expose!

 

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பல விஐபிகள், அரசு உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் இப்பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, கிரீன் பார்க் பள்ளி நிர்வாகமே நீட் பயிற்சி மையத்தையும் தொடங்கியது. கடந்த 2016-2017ம் ஆண்டில் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 405 பேரும், 2017-2018ம் கல்வி ஆண்டில் 533 பேரும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததால் இப்பயிற்சி மையத்திற்கு மாநில அளவில் மவுசு கூடியது.

இதனால் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 படிக்காத மாணவர்கள்கூட நீட் பயிற்சிக்காக இம்மையத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்கள், பெற்றோர்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து பெருந்துறை, கரூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையங்களின் கிளைகள் தொடங்கப்பட்டன.

 

 Namakkal: Income Tax Department Test at Green Park Neet Training Center; 150 crore tax evasion expose!


இம்மையத்தில் நீட் பயிற்சிக்கு சேரும் மாணவர்களிடம் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாமக்கல் மையத்தில் மட்டுமே 2000 பேர் படித்து வருகின்றனர். பெருந்துறை, கரூர், சென்னை கிளைகள் என மொத்தமாக இக்குழுமத்தில் 5000 மாணவர்கள் படித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முறையான ரசீதுகள் தருவதில்லை என்றும், பெறப்படும் தொகை ஒன்றாகவும், அதற்கு வழங்கப்படும் ரசீதில் மிகச்சொற்பமான  தொகையைக் குறிப்பிட்டு பெயரளவுக்கு ரசீது வழங்கப்படுவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து சென்னை மற்றும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அக். 11ம் தேதி காலை, ஐந்து குழுக்களாக பிரிந்து சென்று நாமக்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள கிரீன்பார்க் நீட் பயிற்சி மையங்கள், அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள் என மொத்தம் 17 இடங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் இறங்கினர். முதல் நாள் சோதனை, நள்ளிரவைக் கடந்தும் நடந்தன.

தலைமை அலுவலகமான நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் உள்ள கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சில பெட்டிகளில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கணினி மென்பொருள்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டு இருந்தது. மேலும், ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும், கணினியில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது தெரிய வந்தது.

கிரீன்பார்க் பள்ளி இயக்குநர்களான சரவணன், அவருடைய மாமனார் கிருஷ்ணசாமி, சகோதரர் பாலு, குருவாயூரப்பன், குணசேகரன், மோகன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முரணான தகவல்களைக் கூறியுள்ளனர். இப்பயிற்சி நிறுவனம் மொத்தமாக 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிறார்கள்.

 

 Namakkal: Income Tax Department Test at Green Park Neet Training Center; 150 crore tax evasion expose!

 

இந்த சோதனை சனிக்கிழமை அன்றும் தொடர்ந்த நிலையில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (அக். 13) தொடர்ந்து நடந்தது. இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் சோதனை முடியவில்லை.

இதையொட்டி, பள்ளிக்குள் செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி விடுதிகள், அலுவலகத்தில் இருந்தும் யாரும் வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சி மையத்திற்கு சிட்டி யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளில் கணக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. வரித்துறை சோதனையையொட்டி, பள்ளியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இயங்கி வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கிரீன்பார்க் நீட் பயிற்சி மைய குழுமங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த தகவல்களின்பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி கலையரங்கத்தில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் காட்டாத வருமானம் இருப்பதாக தெரிகிறது. பினாமிகள் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு கணக்கில் வராத தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.