Skip to main content

பொறியியல் மாணவி கொலை ! பெற்றோரின் செயலால் பள்ளி மாணவி ஆத்திரம் !!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


நாமக்கல் கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன். கூலித்தொழிலாளி.இவருக்கு இரண்டு மகள்கள்.மூத்த மகள் மோனிஷா (18). நாமக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இளைய மகள், பிளஸ்டூ படித்து தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்.

ஏப்ரல் 4ம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, \தனது இடப்பக்க கையில் பிளேடால் அறுத்துக் கொண்டதாகச் சொல்லி, அவருடைய பெற்றோர் மகளை நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். 
 

NAMAKKAL ENGINEERING STUDENTS INCIDENT  POLICE INVESTIGATION


இதுகுறித்து நாமக்கல் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோனிஷாவின் உடல், அதே மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில், கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் மோனிஷாவின் மரணம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. 

காவல்துறை விசாரணையில், மோனிஷாவை அவருடைய தங்கையும், தங்கையின் காதலனும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோனிஷாவின் தங்கையான 17 வயதான பிளஸ்டூ மாணவி, அவருடைய காதலன் ராகுல் (19) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''மோனிஷாவின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.வீட்டில் அடிக்கடி அக்கா, தங்கை இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.பெற்றோரும் மோனிஷாவிடம் அதிக பாசமாக இருந்துள்ளனர். இதனால் மோனிஷா,பெற்றோர் தன்னை வெறுப்பதற்கு அக்காதான் காரணம் என நினைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியே மோனிஷாவைத் தீர்த்துக்கட்டும் நிலைக்குச் சென்றது. 

 

http://onelink.to/nknapp


கடந்த 4ம் தேதி, அக்காவும் தங்கையும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மோனிஷாவின் தங்கை பக்கத்துத் தெருவில் இருக்கும் தனது காதலனை வரவழைத்துள்ளார்.பின்னர் இருவரும் சேர்ந்து மோனிஷாவைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.பின்னர் அவருடைய கையில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியிருப்பது தெரிய வந்துள்ளது,'' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.