Skip to main content

நாமக்கல் அருகே பள்ளி திறந்த முதல் நாளிலேயே எஸ்.எஸ்.எல்.சி. மாணவிக்கு கரோனா!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

namakkal district schools student covid 19 test for positive


தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், நோய்த்தொற்றின் வேகம் படிப்படியாக கட்டுக்குள் வந்ததோடு, தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. 

 

இதையடுத்து செப். 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், 50 சதவீத மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 367 அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்துவரும் மாணவிக்கு, செப். 1ஆம் தேதி இரவு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, எலச்சிப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் பள்ளிக்குச் சென்ற குழுவினர், அனைத்து மாணவிகள், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

 

நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி படித்துவந்த வகுப்பறை மூடப்பட்டது. அவருடன் படித்துவரும் மற்ற மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கிருமிநாசினி மருந்தும் அடிக்கப்பட்டது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் பள்ளியில் நேரில் ஆய்வு செய்தார். இச்சம்பவத்தால் அப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.