Skip to main content

வேலை கிடைக்காத விரக்தியில் அத்தையை வெட்டிக்கொன்ற ஆசிரிய பட்டதாரி! மேலும் இருவரையும் வெட்டினார்!!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

 

namakkal district puduchathiram incident police


நாமக்கல் அருகே, முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த வாலிபர், அத்தையை கொடுவாளால் வெட்டிக் கொன்றார். பக்கத்து வீட்டில் இருந்த பெரியப்பா, உள்ளூர்க்காரர் ஒருவரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளி. இவர்களுடைய மகன் கோடீஸ்வரன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோடீஸ்வரன், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக முயற்சித்தும் வேலை கிடைக்காததால், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தார். இதற்கிடையே, நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் அரசு வேலை பெற்றுத்தருவதாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியதை நம்பி, அவரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

 

கோடீஸ்வரனும், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லித்தான் மேற்சொன்ன தொகையை வசூலித்துள்ளார். இவரிடம் பணத்தை பெற்றுச்சென்ற நபர், சொன்னபடி அரசு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், கோடீஸ்வரனிடம் பணம் கொடுத்த நபர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடீஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோடீஸ்வரன் வீட்டுக்குச்சென்று, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோடீஸ்வரன், காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (ஆக. 7) வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரன், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அத்தை லட்சுமியை (65) கொடுவாளால் திடீரென்று சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 

அருகில் இருந்த தனது பெரியப்பா பெரியண்ணன் (70), வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெரியப்பாவையும் வெட்டியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத கோடீஸ்வரன், வீட்டை விட்டு வெளியே வந்தார். உள்ளூரைச் சேர்ந்த நரேஷ்குமார் (30) என்பவர் அந்த வழியாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவரையும் கொடுவாளால் வெட்டினார். அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன்பிறகு எதுவுமே நடக்காததுபோல், தன் வீட்டுக்குள் சென்று உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டார் கோடீஸ்வரன்.

 

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெரியண்ணன், நரேஷ்குமார் ஆகிய இருவரையும் மீட்ட ஊர்க்காரர்கள், அவர்களை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதையடுத்து, வீட்டுக்குள் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். கதவை தட்டியும் அவர் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடீஸ்வரனின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த பிறகே, அவரை கைது செய்தனர். காவல்துறையினர் வீட்டுக்குள் ஒரு மூலையில் இருட்டுக்குள் உட்கார்ந்து இருந்துள்ளார்.

 

கைதான கோடீஸ்வரன் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''அரசாங்க வேலை வாங்கிக் தருவதாக பலரிடம் பணம் வசூலித்தேன். அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்த ஒருவர் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதால் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் கேட்டபோதும், தரமுடியாது என்று சொல்லி விட்டார். இதை அறிந்த அத்தை, எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்லிக்கொண்டே இருந்தார்.

 

விரக்தியில் இருந்த எனக்கு அவர் அட்வைஸ் செய்தது பிடிக்காததால் அவரை வெட்டிக்கொன்றேன். பக்கத்தில் இருந்ததால் பெரியப்பாவையும், என்னை பிடிக்க வந்தார் என நினைத்து நரேஷ்குமாரையும் வெட்டினேன்,'' என்று கூறியுள்ளார். விசாரணையின்போது கோடீஸ்வரன் பலமுறை புத்தி பேதலித்தது போல் முன்னுக்குப் பின் முரணாகவும், சம்பந்தம் இல்லாமல் பேசியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

 

இந்த சம்பவம் புதுச்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.