Skip to main content

மகன் கொலை வழக்கில் தாயின் ஆண் நண்பர் கைது!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

namakkal district paramathi velur incident police investigation


பரமத்தி வேலூர் அருகே, வாலிபர் கொலை வழக்கில் தாயாரின் ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வால்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி ராணி (55). இவர்களுடைய மகன் வெள்ளையன் என்கிற தங்கராசு (22). கணவர் சுப்ரமணி சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து தாயும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த 6- ஆம் தேதி காலை, சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தங்கராசு கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தங்கராசுவை கொலைச் செய்ததாக உள்ளூரைச் சேர்ந்த சுப்ரமணி (52) என்பவரை பரமத்தி வேலூர் அருகே மணியனூர் பகுதியில் வைத்து ஜன. 8- ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

 

சுப்ரமணி அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ராணியின் மகன் தங்கராசுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தான். கடந்த 5- ஆம் தேதி இரவு அவன், தன் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தான். நானும் அப்போது ராணியைப் பார்ப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்றேன். அவன் என்னிடமும் தகராறு செய்தான். மேலும், ராணியைச் சந்திக்கக் கூடாது என்று அடிக்கடி மிரட்டி வந்தான். 

 

திடீரென்று என்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு ஓடியதால் அவனை துரத்திக் கொண்டு ஓடினேன். சரஸ்வதி நகர் அருகே அவனை மடக்கிப் பிடித்தேன். இனியும் அவன் உயிருடன் இருந்தால் அடிக்கடி எனக்கு தொல்லை கொடுப்பான் என்பதால் என்னிடம் இருந்த கத்தியால் அவனை குத்தினேன். அவன் செத்துவிட்டான். 

 

அதன்பிறகு எனது செல்போனை எடுத்துக்கொண்டு நான் என் வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் ராணி, மகனைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். நான் நடந்த விவரங்களைச் சொன்னேன். தங்கராசுவின் சடலத்தை நாங்கள் இருவரும் தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒரு காட்டுக்குள் போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

 

மறுநாள் விடிந்தபோது தன் மகனை காணவில்லை என ராணி அக்கம்பத்தினரிடம் எதுவும் தெரியாதது போல் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே காவல்துறையினர் சடலத்தைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கியதால் நாங்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டோம். ஜன. 8- ஆம் தேதி மணியனூர் வந்தபோது காவல்துறையினர் என்னை மடக்கிப் பிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கொலையில் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக தங்கராசுவின் தாயார் ராணியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.