Skip to main content

மகன் கொலை வழக்கில் தாயின் ஆண் நண்பர் கைது!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

namakkal district paramathi velur incident police investigation


பரமத்தி வேலூர் அருகே, வாலிபர் கொலை வழக்கில் தாயாரின் ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வால்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி ராணி (55). இவர்களுடைய மகன் வெள்ளையன் என்கிற தங்கராசு (22). கணவர் சுப்ரமணி சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து தாயும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த 6- ஆம் தேதி காலை, சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தங்கராசு கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தங்கராசுவை கொலைச் செய்ததாக உள்ளூரைச் சேர்ந்த சுப்ரமணி (52) என்பவரை பரமத்தி வேலூர் அருகே மணியனூர் பகுதியில் வைத்து ஜன. 8- ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

 

சுப்ரமணி அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ராணியின் மகன் தங்கராசுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தான். கடந்த 5- ஆம் தேதி இரவு அவன், தன் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தான். நானும் அப்போது ராணியைப் பார்ப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்றேன். அவன் என்னிடமும் தகராறு செய்தான். மேலும், ராணியைச் சந்திக்கக் கூடாது என்று அடிக்கடி மிரட்டி வந்தான். 

 

திடீரென்று என்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு ஓடியதால் அவனை துரத்திக் கொண்டு ஓடினேன். சரஸ்வதி நகர் அருகே அவனை மடக்கிப் பிடித்தேன். இனியும் அவன் உயிருடன் இருந்தால் அடிக்கடி எனக்கு தொல்லை கொடுப்பான் என்பதால் என்னிடம் இருந்த கத்தியால் அவனை குத்தினேன். அவன் செத்துவிட்டான். 

 

அதன்பிறகு எனது செல்போனை எடுத்துக்கொண்டு நான் என் வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் ராணி, மகனைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். நான் நடந்த விவரங்களைச் சொன்னேன். தங்கராசுவின் சடலத்தை நாங்கள் இருவரும் தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒரு காட்டுக்குள் போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

 

மறுநாள் விடிந்தபோது தன் மகனை காணவில்லை என ராணி அக்கம்பத்தினரிடம் எதுவும் தெரியாதது போல் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே காவல்துறையினர் சடலத்தைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கியதால் நாங்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டோம். ஜன. 8- ஆம் தேதி மணியனூர் வந்தபோது காவல்துறையினர் என்னை மடக்கிப் பிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கொலையில் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக தங்கராசுவின் தாயார் ராணியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.