Skip to main content

ஆண் நண்பருடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்..!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

namakkal district paramathi vellore


பரமத்தி வேலூர் அருகே, ஆண் நண்பருடன் இருப்பதற்கு இடையூறாக இருந்த மகனை, பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வால்நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு வெள்ளையன் என்கிற தங்கராசு (22) என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்து விட்டதை அடுத்து, தாயும் மகனும் தனியாக வசித்து வந்தனர். 


இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சுப்ரமணியுடன் கவிதாவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர். தங்கராசுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி கவிதாவிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துவந்துள்ளார். 


கடந்த 5ஆம் தேதி, தங்கராசு மது குடிப்பதற்காக கவிதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், வீட்டில் இருந்து தங்கராசு வெளியே கிளம்பிவிட்டார்.


இந்நிலையில், ஜன.6-ல் வாய்நாயக்கன்பாளையத்தில் உள்ள சரஸ்வதி நகர்ப் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் தங்கராசு சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து நல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கவிதா தொடர்பு வைத்திருந்த சுப்ரமணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவி, குழந்தைகள் கோவையில் வசிக்கின்றனர். அவர்களுடன் சுப்ரமணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் அவர், அடிக்கடி வீட்டுக்குவந்து செல்வதற்கு கவிதாவின் மகன் தங்கராசு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது.
 

cnc


சம்பவத்தன்று, தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு தங்கராசு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுப்ரமணியத்திடமும் தங்கராசு தகராறு செய்துள்ளார். இது கைகலப்பாக மாறியது. தங்கராசு தங்களது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதாகக் கருதிய கவிதாவும், சுப்ரமணியும் சேர்ந்து தங்கராசுவை கொலை செய்துள்ளனர். அவர்கள்தான் சடலத்தை சரஸ்வதி நகரில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.


தலைமறைவான ஜோடிகளை பிடிக்க வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கந்தம்பாளையம் எஸ்.ஐ. முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.