Skip to main content

கடனைத் திருப்பி கொடுக்காததால், கொலை! சடலத்தை வீட்டு நிலத்தில் புதைத்த இளைஞர்கள்!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

namakkal district not repay the loan person incident youths police


நாமக்கல் அருகே, கடனைத் திருப்பிச் செலுத்தாத வாலிபரை, கத்தியால் குத்திக்கொன்று விட்டு, சடலத்தை வீட்டு நிலத்தில் புதைத்த இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
 


நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் தினேஷ் (35). மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் நரேஷ்குமார் (35). நாமக்கல் ஆண்டவர் நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நரேஷ்குமார் நண்பர் தினேஷிடம் வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அவர் முறையாக கடன் அசல், வட்டியைச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2- ஆம் தேதி, நரேஷ்குமார் வீட்டுக்குச் சென்ற தினேஷ், அவரை வெளியே ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தரும்படி கூறியிருக்கிறார். அதற்கு நரேஷ்குமார், கடன் வாங்கிய பணத்தை, தான் வேறு சில நபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், அவர்கள் சொன்னபடி தராததால், தன்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். 

அவர் சொல்வது எல்லாம் உண்மைதானா எனச் சந்தேகம் அடைந்த தினேஷ், யார் யாருக்கு நரேஷ்குமார் கடன் கொடுத்தார் என்று குறிப்பிட்டாரோ அவர்களிடம் நேரிடையாகச் சென்று கேட்டுள்ளார். அப்போதும் தினேஷூக்குத் தன்னுடைய பணம் வசூலாகவில்லை. இதையடுத்து கடந்த 4- ஆம் தேதி, நரேஷ்குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற தினேஷ், அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். இருவரும் மது குடித்துள்ளனர். போதையில் இருந்த அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. 
 

 

namakkal district not repay the loan person incident youths police


அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ், திடீரென்று நரேஷ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தன் நண்பர்கள் உதவியுடன் நரேஷ்குமாரின் சடலத்தைக் காரில் கொண்டு சென்று மறைக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, வேறு வழியின்றி தன் வீட்டுக்குப் பின்பகுதியில் உள்ள நிலத்தில் ஆழமாகக் குழி தோண்டி சடலத்தைப் புதைத்து உள்ளனர்.

இதற்கிடையே, நரேஷ்குமார் வீட்டை விட்டுச்சென்று நான்கு நாள்களாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், இதுகுறித்து தினேஷிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், இதுகுறித்து அவர்கள் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல் ஆய்வாளர் செல்வராஜ், எஸ்.ஐ. பூபதி மற்றும் காவலர்கள் தினேஷ் வீட்டுக்குச் சென்று நேரில் விசாரித்தனர். நரேஷ்குமாரை கொலை செய்து, வீட்டு பின்பக்கத்தில் புதைத்து விட்டதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன காவல்துறையினர், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தை மீண்டும் தோண்டிப் பார்த்தனர். அங்கே நரேஷ்குமாரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தினேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

http://onelink.to/nknapp


இந்தக் கொலை தொடர்பாக தினேஷின் நண்பர்கள் அஜித்குமார் (22), மதன்ராஜ் (25), ஆட்டோ ஓட்டுநர் வடிவேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.