Skip to main content

கொல்லிமலை காப்புக்காட்டில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

namakkal district kollimalai women incident police investigation

 

கொல்லிமலை காப்புக்காட்டுக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. உள்ளாடையால் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு, மர்ம நபர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டுக் கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டலினி நாடு கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். விவசாயி. இவருடைய மனைவி தீபா (27). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

ஜூலை 12- ஆம் தேதி மதியம் தீபா, ஆத்துக்காடு பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டுள்ளார். அதையடுத்து, மொக்கசடையன் கோயில் அருகே உள்ள ஆற்று ஓடையில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். 

 

அப்போது ஆடு, மாடுகள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. அதனைப் பார்த்த தீபா பதற்றத்துடன், கால்நடைகளை விரட்டி விடுவதற்காகச் சென்றார். அதன்பின் அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இரவாகியும் வீடு திரும்பவில்லை. 

 

அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஓடைக்கரையில் அவர் கொண்டு சென்ற அழுக்குத் துணிகள் அப்படியே கிடந்தன. அருகில் உள்ள காப்புக்காட்டுக்குள் சென்று பார்த்தபோது மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில், அவர் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார். தீபா அணிந்திருந்த பாவாடையால் அவருடைய வாய் கட்டப்பட்டு இருந்தது. 

 

தலையில் பலத்த காயம் இருந்தது. அதேநேரம் அவர் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தன. மர்ம நபர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வாழவந்திநாடு காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

 

காவல்துறை எஸ்.ஐ. மணி மற்றும் காவலர்கள், தீபாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அவர் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தீபாவின் சடலம், உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

http://onelink.to/nknapp

 

உள்ளூரைச் சேர்ந்த நபர்களா அல்லது காப்புக்காட்டுக்குள் நடமாடிய மர்ம நபர்கள் யாருக்கேனும் இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காப்புக்காட்டுக்குள் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் மலைக்கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ள விரும்பிய கொடூர தாய்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A mother who wanted to push her daughter into incident in uttarpradesh

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.