Skip to main content

நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது!  

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

 

NAMAKKAL DISTRICT INCIDENT POLICE ARRESTED

 

நாமக்கல் அருகே, நிலத்தகராறில் உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல், அண்ணனும், அண்ணியும் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பழனிவேலுவின் தம்பி அண்ணாத்துரை (வயது 50). இவரும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். இவருடைய மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு உள்ளூரில் சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதைப் பாகம் பிரிக்காமல் அண்ணன், தம்பி இரு குடும்பத்தினரும் கூட்டுப்பட்டாவாக விவசாயம் செய்து வந்தனர்.

 

இதற்கிடையே, தம்பிக்குத் தெரியாமல் கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்தை, பழனிவேல் தனது மனைவி பழனியம்மாள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்துள்ளார். அந்த நிலத்தின் பெயரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனும் பெற்றிருந்தார். அண்மையில், அரசின் உத்தரவால், அவருடைய விவசாயக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் இந்த விவரங்கள் அண்ணாத்துரைக்கு தெரியவந்தது. இதுகுறித்து பழனிவேலுவிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டு, சமரசம் செய்துவைக்க முயன்றனர். ஆனால் அண்ணன், தம்பிக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

 

இந்த நிலையில்தான் மார்ச் 24- ஆம் தேதியன்று, கல்யாணி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அன்று இரவு அண்ணாத்துரை தோட்டத்தில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த பழனிவேல், அவருடைய மனைவி பழனியம்மாள் தோட்டத்திற்குச் சென்று அண்ணாத்துரையிடம் தகராறில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் இருவரும் சேர்ந்து பழனிவேலுவை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாத்துரை மூர்ச்சையாகி கீழே சரிந்து விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள், அண்ணாத்துரையின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் தலை நசுங்கிய அண்ணாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 

இதையடுத்து பழனிவேலுவும், பழனியம்மாளும் எதுவுமே நடக்காததுபோல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 

காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் மற்றும் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் தம்பிக்குள் நிலத்தகராறு இருந்து வந்ததும், சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து பழனிவேலுவும், அவருடைய மனைவியும் திடீரென்று தலைமறைவாகி விட்டதும் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், நாமக்கல்லில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த பழனியம்மாள், பழனிவேலு ஆகிய இருவரையும் மார்ச் 25- ஆம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கூட்டுப் பட்டாவில் இருந்த மொத்த நிலத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் அண்ணாத்துரையை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.