Skip to main content

சீமான் தம்பிகளுக்கு இன்று ட்ரிபிள் ட்ரீட்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலின் அடுத்த தலைமுறை முகங்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது பேச்சை ரசிக்கும் இளைஞர் கூட்டம் ஒன்று இருக்கிறது. இயக்கமாகத் தொடங்கி அரசியல் கட்சியாக உருப்பெற்று குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறது 'நாம் தமிழர் கட்சி'.

 

seeman



தமிழ் சினிமாவில் இயக்குனராகத் தன் பயணத்தைத் தொடங்கிய சீமான், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். 'பாஞ்சாலங்குறிச்சி' படம் மூலமாக இயக்குனரான சீமான், தனது 'தம்பி' படத்தின் மூலம் பெரிய கவனமீர்த்தார். 'தம்பி' என்று பிரபாகரனை குறிப்பிடும் பெயர், முழுக்க முழுக்க தமிழ் வசனங்கள், அப்போதைய சமூக பிரச்சனைகளை கையில் எடுத்த கதை, பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட நாயகன் பாத்திரம் என 'தம்பி'யில் தனது புரட்சி முகத்தை காட்டியிருந்தார் சீமான். அவரது படங்களிலேயே பெரிய வெற்றியை பெற்ற படம் அதுதான்.


அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்த சீமான், 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் ஒரு கிராமத்து சமூக சேவகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே அவரது அரசியல் மேடை பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டார். இப்படி மெல்ல அவரது பாதை சினிமாவிலிருந்து அரசியலின் பக்கம் திரும்பியது. முன்பே செயல்பாடுகளில் இருந்தாலும் ஈழப்போர் நடந்த சமயத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். இன்று சீமானின் பல கருத்துகள், பேச்சுகள் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகின்றன. மீம்ஸுலகிலும் அவருக்கு முக்கிய இடம் இருக்கிறது. என்றாலும் மறுக்க முடியாத ஒரு இடத்தை அவர் அடைந்திருக்கிறார். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்திருக்கிறார்.

இன்று (08-11-2019) 'நாம் தமிழர் கட்சி'யினருக்கும் சீமானை நேசிக்கும் அவரது தம்பிகளுக்கும் மிக முக்கியமான நாள். சீமான் பிறந்த நாள், முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்துள்ள 'மிக மிக அவசரம்', 'தவம்' படங்கள் வெளிவரும் நாள் என மூன்று வகைகளில் அவர்களுக்கு இது முக்கியமான நாளாகிறது. இன்று சீமான் தம்பிகளுக்கு ட்ரிபிள் ட்ரீட்தான்!                  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.