Skip to main content

ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிய நல்லமநாயுடு!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு. இவருக்கு வயது 83. உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்கக் காரணமாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான இன்னொரு வழக்கு, பிளெசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு. இந்த வழக்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கிற்காக இவர் அங்கு சென்றபோது நடராஜனும் சென்றுள்ளார். இருப்பினும் அதனை தைரியமாக எதிர்கொண்டுள்ளார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

தமிழ்நாடு முதல்வராக கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு 1996 ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டிவந்தனர். அப்படிப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லமநாயுடுவின் விசாரணையும், அவர் சேகரித்த தடயங்களும் ஆவணங்களும் மிக முக்கிய காரணம். அத்துடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குற்றவாளிகளுக்குத் தண்டனையைத் தேடி தந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்க பெரும் துயரங்களைச் சந்தித்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வுபெறும்போது உள்ள பலன்களை நிறுத்தியது. அரசு இல்லத்திலிருந்து காலி செய்யச் சொல்லி தொந்தரவு செய்ததால், வீட்டையும் காலி செய்துள்ளார். வழக்குக்காக லண்டனுக்குச் சென்ற கணக்கு வழக்குகளை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், அவரது மகன் பணியாற்றும் இடத்திலும் தொந்தரவு செய்துள்ளனர். இவ்வளவு தொந்தரவுகளையும், துயரங்களையும் இவர் தனியாகவே நின்று சந்தித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் நடந்தது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யாவுக்கு வழக்கு தொடர்பாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

1961ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகச் சேர்ந்த இவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த வாரம் அவர் பணியில் சேர்ந்து 60 ஆண்டுகாலம் முடிவடைகிறது. இதனை தன்னுடன் பணியாற்றியவர்களுடன் கொண்டாட இருந்தநிலையில் காலமானார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

1997ஆம் ஆண்டே நல்லமநாயுடு ஓய்வுபெற்றுவிட்டார். நக்கீரன் பலமுறை வலியுறுத்திய பின்னர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த தன் அனுபவங்களை ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். அப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.