Skip to main content

காதலனை திருமணம் செய்ய பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் வேலை பார்ப்பவர் சிவக்குமார். இவருக்கும் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த நளினிக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஜீவித்குமார், 5 வயதில் ஜஸ்வந்த்குமார், ஒன்னரை வயதில் ரித்விகா என்கிற பெண் குழந்தை இருந்தது.

 

c


நளினியின் போக்கால் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் இருவரும் பிரிந்தனர். மகன்கள் இருவரை கணவரிடம் விட்டுவிட்டு ஒன்னரை வயது குழந்தையோடு வாணியம்பாடியில் தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.


நளினிக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்னையில் பணியாற்றும் முரளி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனி வீடு எடுத்து வாணியம்பாடியில் தங்கியிருந்தனர். தங்களது உறவுக்கு குழந்தை தடையாக இருப்பதால் அதை கொலை செய்து வீச முடிவு செய்தனர்.    அதன்படி கடந்த பிப்ரவரி 16ந்தேதி, பச்சிளம் குழந்தையை, தங்களது காம இச்சைக்காக, உடல்பசியை முறையற்ற வகையில் தீர்த்துக்கொள்ள கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.


திடீரென குழந்தை அழுதது இறந்துவிட்டது எனச்சொல்லி நாடகமாடினர். நளினியின் குடும்பத்தாருக்கு இதில் சந்தேகம் வந்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அதன் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்ததாக போலிஸார் கூறுவதில் இருந்து, என்னை திருமணம் செய்துக்கொள் என முரளியிடம் கேட்டேன். விவாகரத்து வாங்காத உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது. அதோடு, அவனுக்கு பிறந்த பெண் குழந்தை உன்னிடம் உள்ளது. அதை நான் வளர்க்க முடியாது எனக்கூறினான். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்துள்ளார் என்கின்றனர்.

 

நளினியை கைது செய்து சிறையில் அடைத்த போலிஸார், முரளியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.