Skip to main content

தன் வழக்கில் நீதிமன்றத்தில் நளினியே வாதாடவுள்ளார்?

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் நளினி. இவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும், வயதான தனது தாயாரை பார்த்துக்கொள்ள வேண்டும்மென 6 மாதம் பரோல் வேண்டும்மென கேட்டு அரசாங்கத்துக்கு மனு செய்தார். அதனை அதிமுக அரசாங்கம் பரிசீலனை செய்யவில்லை.

 

nalini

 

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கிடப்பில் இருந்துவந்தது. இந்நிலையில் 45வது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏப்ரல் 15ந்தேதி வருகிறது. இந்த வழக்கில் தன் சார்பில் தானே ஆஜராகி நளினி வாதாடவுள்ளார் என்கிற தகவல் அவர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

 

வாதியே தனது வழக்கில் ஆஜராக சட்டத்தில் இடம்முண்டு. அதன்படியே நளினி தனது பரோல் வழக்கில் ஆஜராகவுள்ளார். அப்போது தனது மனதில் அழுத்திக்கொண்டுள்ள விவகாரத்தை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.