ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனையடுத்து நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஒரு முறைக்கு 30 நாட்கள்தான் பரோல் வழங்கமுடியும் என்ற கூறப்பட்டது. இதனையடுத்து ஊடங்களை சந்திக்க கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஒரு மாதம் (30) நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
திருமண வேலை முடியவில்லை என்று வெளியே வந்தபின்னர் மூன்று வாரங்கள் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார். அதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஏற்கனவே மூன்று வாரங்கள் இவரது பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், வரும் 15ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு இவரது பரோல் முடிவடைகிறது.
இந்நிலையில் மகளின் திருமண வேலை இன்னும் முடியவில்லை அதனால் அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தார் நளினி. மேலும், நான்கு வாரம் பரோல் நீட்டிக்கப்பட முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.