Skip to main content

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Nakkheeran  on journalists; Condemned by journalists' associations

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அதேபோல் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் கடந்த (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை  திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

 

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கடந்த 19-09-2022 அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு காரில் திரும்பி வரும்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த சிலர், இருவர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளோரையும் கைது செய்ய வேண்டும்.

 


திண்டுக்கல் பிரஸ்கிளப்: கடந்த 19ம்தேதி நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்துவிட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தலை வாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் நிருபர் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை திண்டுக்கல் பிரஸ்கிளப் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், போட்டோகிராபர் அஜித் குமார் ஆகிய இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் கூடிய விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு இந்த கொலை வெறி தாக்குதலை தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திண்டுக்கல் பிரஸ்கிளப் வலியுறுத்துகிறது.

 

மதுரை பிரஸ் கிளப்: நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அரசை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வலியுறுத்துகிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இந்த வழக்கில் உள்ள மர்மம் நீங்க வேண்டும் என நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளரை தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோரின் காரை தலைவாசல் அருகே தடுத்து நிறுத்திய குண்டர்கள் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயடைந்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. குண்டர்களில் தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்.

 

விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், 19-09-2022.அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார்மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னணியில் உள்ள சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.