நெல்லை கண்ணன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி!

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மைக் கொண்ட பேச்சாளர், வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் ‘நெல்லை கண்ணன்’ என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18- ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

nakkheerangopal nellai kannan
இதையும் படியுங்கள்
Subscribe