Skip to main content

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

 

nakkheeran gopal

 

நக்கீரன் ஆசிரியர் கைது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

நக்கீரன் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் கோபால் அவர்களை தேச துரோக சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை குறித்த செய்திக் கட்டுரையில் வெளியான தகவல் தவறானவை என, ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்த கைது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான முட்டுக்கட்டையாகும். அதேபோல் அவர் கைது செய்யப்பட்ட விதமும் ஒரு சர்வாதிகார ஆணவப் போக்குடன் நிகழ்த்தப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான அத்துமீறல் நடவடிக்கையாகும்.

 

சமீப காலமாக அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், போராடுபவர்களையும் இதுபோன்று விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வது என்பது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இது கருத்துரிமைக்கும், எழுத்துரிமைக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.

 

இந்த கைது நடவடிக்கையானது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதத்திலும், நீதிமன்றங்களை அவமதித்தும், காவல்துறையை மிக மோசமாக விமர்சித்தும் வருகின்ற பாஜகவின் எச்.ராஜா மீதோ, பெண் பத்திரிக்கையாளர்களை மிக மோசமாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர் மீதோ மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் இன்றும் போலீஸ் பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

 

சட்டதின் முன் அனைவரும் சமம் என்கிற போது சிலரை சிலரின் அறிவுறுத்தல் காரணமாக பாதுகாக்கும் தமிழக காவல்துறை, சமூக அவலங்களையும், ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளையும், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினரின் சட்டவிரோத செயல்களையும் அம்பல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களையும், பத்திரிக்கையாளர்களையும் நசுக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேசினால் கைது, போராடினால் கைது, எழுதினால் கைது என்பது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான முதல் ஆடியோவிலிருந்து அவரது வாக்குமூலம் வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் தொடர்பு குறித்து தெளிவான ஆதாரங்களை கொண்டு நக்கீரன் அம்பலப்படுத்தி வரும் நிலையில், அந்த விவகாரத்தை இரண்டு பேராசிரியர்களுடன் முடித்துவிட சதி செய்யப்பட்டு வருகிறது. இதனாலேயே நக்கீரன் பத்திரிக்கையை முடக்குகின்ற வகையிலும், மேற்கொண்டு இந்த விவகாரத்தை யாரும் எழுப்பக்கூடாது என்கிற மிரட்டல் அடிப்படையிலும், நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்ந்து எவ்வித அதிகார தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமெனில் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.    

 

இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையீட்டின் பேரில் நக்கீரன் கோபால் அவர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தொடரும் ஆளுநர், தமிழக காவல்துறையின் தொடரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.