ADVERTISEMENT

ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது கண்டனத்திற்குரியது- வைகோ

10:23 AM Oct 09, 2018 | kalaimohan

ADVERTISEMENT

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களை அடையாறு சரக போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட நிலையில் அவரை சிந்தாதிரிப்பேட்டை ஜாம்பஜார் காவல்துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்பஜார் காவல்துணை ஆணையர் அலுவகத்தில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT