Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி..! ஜல்சா மசாஜ்கள் நடத்தி வந்த 5 பேர் அதிரடி கைது..!

Nakkeeran news effect..! 5 arrested for conducting  massage centers ..!

''சுண்டி இழுக்கும் ஜல்சா மசாஜ்கள்! -தடம் மாறும் இளைஞர்கள்!'' என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 3௦ அக்டோபர் 2 இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.

Advertisment

மும்பை, சென்னை எனத் தொடங்கிய மசாஜ் கிளப்புகள் இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இரண்டாவது பெரிய நகரங்களில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இத்தகைய பாலியல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு, ரகசியமாக சக்கைப்போடு போடுகின்றன. இளைஞர்கள் இந்த மசாஜ் கிளப் நோக்கி படை யெடுக்கிறார்கள் என்று பதிவு செய்திருந்தோம்.

Advertisment

இந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடி விசாரணையில் ஐந்து பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். 1௦ பெண்கள் மீட்கப்பட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Chennai Massage center
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe