அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று(08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை நக்கீரன் ஆசிரியர், நேரில் சென்று புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கவிஞர் புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நக்கீரன் ஆசிரியர் (படங்கள்)
Advertisment