Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 25/02/2019 | Edited on 25/02/2019
water

 

புதுச்சத்திரம் அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்கிறது விவசாயிகள் கவலை என்ற தலைப்பில் நக்கீரன் இணையதள செய்தியில் கடந்த சனிக்கிழமை இரவு செய்தி மற்றும் படங்களுடன் பதிவு செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக, இதனை பார்த்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  அங்குள்ள பாதிப்புகளை பதிவு செய்தனர். இந்த செய்திகள்  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வைக்கு சென்றது. பின்னர் அது குறித்த விவரத்தை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்ததின் பேரில், சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்காலின் கிளை வாய்க்காலான மானம்பாத்தான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் காய்ந்து கிடக்கும் நெற்பயிர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதனை விவசாயிகள் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.