Skip to main content

தி.மு.க.வில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்?

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

Nayanar Nagendran MLA praised the Chief Minister and Minister!

 

அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். 

 

விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "முதலமைச்சர், திருநெல்வேலிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த நேரத்தில், நான் அந்த மாவட்டத்தின் சார்பாக இரண்டு மூன்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். அவர் புறப்படுகிற நேரத்தில் மருத்துவக் கல்லூரி கோரிக்கைகளை நான் சொன்னேன். ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. 

 

நான் இரண்டு வாரத்தில் வருகிறேன். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலே வைத்து இதற்கான உத்தரவு அனைத்தையும் வழங்குவோம் என்று கூறி உத்திரவாதத்தைத் தந்ததோடு மட்டுமில்லாமல், அவரது உதவியாளர் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசி அமைச்சர் வருகிறார், நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு செயலை செய்கின்ற போது, எந்த கட்சியாக, எந்த ஆட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றிப் பாராட்டுவதில் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த நேரத்திலே இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார். 

 

எதிர்க்கட்சியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனை தொடர்பாக முன்வைத்த கோரிக்கையை சில நாட்களின் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன், அமைச்சரையும், முதலமைச்சரையும் புகழ்ந்து பேசியுள்ளார். எனவே, அவர் விரைவில் தி.மு.க.வில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.