Skip to main content

ஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

தேனி மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆணிகள் அடிக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சி தடைபட்டு அதன் ஆயுள் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த இரண்டு மாதங்களாக மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Nail removing Festival... Resolution at the Gram Sabha meeting

 

ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் தன்னார்வலர்கள் மரங்களிலிருந்து ஆணிகளை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 71 வது குடியரசு தின விழாவையொட்டி கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

இந்த கோரிக்கையை வலுவாகவும் அங்கங்கே உள்ள தன்னார்வத் தொண்டர்கள் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அம்மாபட்டி, ராமசாமிநாயக்கன் பட்டி, பூதிப் புரம், ஊஞ்சம்பட்டி, வடபுதுப்பட்டி, பாலார்பட்டி, காமாட்சிபுரம், பொட்டிபுரம், சிந்தல சேரி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், மேலச்சேரி, நாகையை கவுண்டன்பட்டி, சின்னபுரம், பூசாரி கவுண்டன்பட்டி ஆகிய 15 ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிப்பதற்கு தடை விதித்தும் ஏற்கனவே அடிக்கப்பட்ட ஆணைகளை அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Nail removing Festival... Resolution at the Gram Sabha meeting

 

மேலும் கோபாலபுரம் அம்மாபட்டி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் சாலையோர மரங்களை வெட்ட தடை விதித்தும், புதிதாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்றும் தீர்மானத்தில்  குறிப்பிடப்பட்டது. இப்படி மரங்களில் அணி அடிப்பதை தடுக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  கண்டு அப்பகுதியில் உள்ள மக்களும் வரவேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.