Skip to main content

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு இலவசமாக டிபன், தேநீர் கொடுத்த ரசிகர்!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020
rajinikanth birthday celebration

 

ரஜினிகாந்தின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் அவருடைய ரசிகா்களால் பெரும் விமா்சையாக  நேற்று (12-ம் தேதி) கொண்டாடப்பட்டது. குமாி  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் தங்கம், கௌரவ தலைவர் அமலன், துணைச் செயலாளர் ஆர்.எஸ் ராஜன், சிறுபான்மை பிாிவு செயலாளர் சதீஷ்பாபு, பத்மனாபபுரம் நகர செயலாளர் ஸ்டைலோ ரெகு, துணை செயலாளர் ஐயப்பன் உட்பட நிா்வாகிகள் சார்பில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் வழிபாட்டு ஸ்தலங்களில் பிரார்த்தனை செய்து கொண்டாடப்பட்டது. காலையில் சிறப்பு பூஜையும், அதனைத் தொடா்ந்து பல்வேறு ஊர்களில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து நலிவடைந்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

 

ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்க இருப்பதன் அறிவிப்புக்கு பிறகு ஆட்டம் பாட்டம் என்று கிராமம், நகரம் என பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா ரசிகர்களை பொியளவில் உற்சாகப்படுத்தியிருப்பதுடன், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாகர்கோவில் மாநகராட்சி, பத்மனாபபுரம் நகராட்சி, குளச்சல் நகராட்சி, குழித்துறை நகராட்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா ஒரு வாரமாக கொண்டாடப்பட இருக்கிறார்கள்.

 

rajinikanth birthday celebration

 

இந்நிலையில் தக்கலை நீதிமன்றம் எதிாில் ஓட்டல் நடத்தி வரும் நாகராஜன் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி தன்னுடைய ஓட்டலில் இன்று காலை டிபன் முதல் மாலை வரை  தேநீா் இலவசமாக வழங்கினார். இதையொட்டி வந்த வாடிக்கையாளர்கள்  ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி சென்றனர். 

 

இது குறித்து நம்மிடம் பேசிய நாகராஜன், 32 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் ரசிகராக நான் மட்டுமல்ல எனது குடும்பமும் இருந்து வருகிறது. எனது அண்ணன் நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக உள்ளார் . ரஜினி தனது உடல்நிலையை கூட பொிதாகக் கருதாமல் தமிழக மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்றும், அதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறேன் என்ற ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களையும் தாண்டி தமிழ் மக்களை அதிகம் ஈா்த்துள்ளது. அவரின் ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு தீபாவளி. ஆனால் இந்த பிறந்தநாளை நாங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என சேர்த்து ஓரே பண்டிகையாக கொண்டாடுகிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.