Skip to main content

'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை!

Published on 27/10/2020 | Edited on 28/10/2020

 

nagerkoil incident dmk


சாத்தான்குளத்தில் தந்தையும் மகனையும் காவல்துறை அதிகாாிகள் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் கன்னியாகுமாியில் மருத்துவா் ஒருவா் டி.எஸ்.பியின் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஆடியோவும் வெளியிட்டு கடிதமும் எழுதி வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகா்கோவில் அருகே பறக்கை இலந்தைவிளையைச் சோ்ந்தவா் மருத்துவா் சிவராமபெருமாள். இவா் வீட்டின் அருகில் மருத்துவமனை நடத்தி வந்தாா். மேலும் தி.மு.க மருத்துவரணி மா.து அமைப்பாளராகவும் இருந்தாா். இவரது மனைவி சீதா அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

 

nagerkoil incident dmk


இந்நிலையில், அவாின் மருத்துவமனையில் வழக்கம் போல் ஒ.பி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த உறவினா்கள் அதிா்ச்சியடைந்த நிலையில் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் சிவராமபெருமாள் கடிதம் ஒன்று எழுதி வைத்துருந்ததையும் போலீசாா் கைபற்றினாா்கள். அதில், "கன்னியாகுமாி டி.எஸ்.பி பாஸ்கரன் என்னை தினமும் மிரட்டி வந்ததாகவும் அவருடைய டாா்ச்சா் எனக்கு மன உளச்சலை ஏற்படுத்தியதுடன், நீ ஏன் சாகாமல் உயிருடன் இருக்கிற, நீ சாகவில்லையென்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன் என மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருந்தாா்.

அதேபோல் சிவராமபெருமாள் பேசிய ஆடியோவும் வெளியானது. அதில் உறவினா் ஒருவாிடம் நான் சாகப் போகிறேன் என்னை யாரும் காப்பாற்ற முடியாது. இது மாற்றி எழுதப்பட முடியாத வரலாறு. டி.எஸ்.பி யின் மிரட்டல் நெருக்கடியால் விஷம் குடித்துவிட்டேன். என்னுடைய மகள் கலெக்டா் ஆகணும். இப்படிப்பட்ட டி.எஸ்.பி போன்றோா்களை தட்டிக்கேட்கணும் எனப் பேசியிருக்கிறாா்.

 

nagerkoil incident dmk


இதுகுறித்து சிவராமபெருமாளின் மனைவி அழுதுகொண்டே கூறும் போது... நான் ஜூன் மாதம் கோவிட் 19 டூட்டி முடிந்து இரவு கணவா் குழந்தைகளுடன் காாில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த வாகனம் லைட் அடிச்சது, பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சி வேகத்தைக் குறைத்தாா். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி அதில் இறங்கியவா் நான் போலீஸ் அதிகாாி என் வாகனத்துக்கே லைட் அடிக்கிறீயா என கெட்ட வாா்த்தையால் பேசினாா். அதை நான் தட்டிக் கேட்டதுக்கு என்னையும் தரக்குறைவாகப் பேசினாா்.

பின்னா் அடுத்த நாள் கன்னியாகுமாி டி.ஸ்.பியிடம் புகாா் கொடுக்கச் சென்ற போது எங்களுக்கு அதிா்ச்சியாக இருந்தது. அங்கு டி.எஸ்.பி ஆக இருப்பது இவா் தான். அப்போது அங்குவைத்தும் என் கணவரை மிரட்டி அனுப்பினாா். அதன் பிறகு தொடா்ந்து என் கணவரை மிரட்டி வந்தாா். மேலும் என் கணவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த விஜய் ஆனந்துக்கும் முன்பகை இருந்து வந்தது. விஜய் ஆனந்தும் டி.எஸ்.பி பாஸ்கரனும் நெருங்கிய நண்பா்கள் இதனால்தான் என் கணவா் தற்கொலை செய்யும் அளவுக்கு டி.எஸ்.பி மிரட்டியிருக்கிறாா் என்றாா்.

இதுகுறித்து திமுக மா.செ. சுரேஷ்ராஜன் டி.எஸ்.பி பாஸ்கரன் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருக்கிறாா். இச்சம்பவம் குமாியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.