Skip to main content

காசியின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி போராட்டம் நடத்திய மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

nagercoil


நாகா்கோவில் காசியின் பாலியல் வேட்டையில் 90க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வசதி வாய்ந்த குடும்பப் பெண்கள் பாதிக்கபட்டுள்ளனா். அந்தப் பெண்களின் ஆபாச வீடியோவை அவா்களிடமே காட்டி பல லட்சங்களை கறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததோடு அதில் பல பெண்களை அவனுடைய நண்பா்களுக்கும் இரையாக்கியுள்ளான்.
 


இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்கள் காசியிடம் எப்படிச் சிக்கினார்கள். அவனுடன் தொடா்புடைய அவனின் கூட்டாளிகள் குறித்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளிவந்தன. மேலும் காசியின் வழக்கை விசாரிக்கும் குமரி மாவட்ட போலீசார் மீது திருப்தி இல்லையென்று பொது மக்களும் மாதா் சங்கங்களும் கருத்து தெரிவித்ததோடு, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு போராட்டங்களும் நடத்தினார்கள். 
 

இந்த நிலையில் இன்று 26-ஆம் தேதி குமரி மாவட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காசி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், மாவட்ட போலீசார் விசாரித்தால் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள், அதனால் சி.பி.ஐ. விசாரணை கேட்டு தடையை மீறி நாகர்கோவில் கலெக்டா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூனிஸ்ட் மா.செ. செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினா் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாதா்சங்க மாநிலத் துணை தலைவா் உஷாபாசி, அந்தோணி, கண்ணன், பாசி உட்பட ஏராளமானோரை போலிசார் கைது செய்தனா். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மாட்டின் தலையை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி? போலீசார் விசாரணை

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Conspiracy to overturn a train with a cow's head in nagercoil

காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (20-02-24) இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் திடீரென கற்களின் மீதி மோதியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.