Skip to main content

காசி வழக்கில் ஆஜராக மறுத்த நாகர்கோயில் வழக்கறிஞர்களுக்கு மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

 Cuddalore - corona virus

 

இளம் பெண்களைச் சீரழித்த காசி வழக்கில், நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அறிவிப்பிற்கு, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.
 


இது குறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், "பல பெண்களைச் சீரழித்த காசி வழக்கில், நாகர்கோயில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என நாகர்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருப்பது, வரவேற்கப்படவேண்டிய வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருந்தாலே, பெரும்பாலான குற்றங்கள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் எனக் குற்றவாளிகளின் மனதில் பதிந்து விட்டாலே, குற்றவாளிகள் குற்றம் செய்ய தயங்கி அஞ்சுவார்கள். 

இந்திய தேசத்திற்கு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் முடிவு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் முன் உதாரணமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் இது போல் நடந்த கொடூரமான சம்பவத்திலும் அங்குள்ள வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகமல் எதிர்ப்பு தெரிவித்து பெண் குலத்தைக் காத்தனர். வழக்கறிஞர்களுக்குப் பெருமை சேர்த்தனர். அது போலவே நாகர்கோவில் வழக்கறிஞர்களை இந்த நாடே பாராட்டும்.
 


கொடூரமான சம்பவத்தில் பொதுமக்களைக் காக்கும் ஆரோக்கியமான முடிவுகளை எடுத்துள்ள நாகர்கோயில் வழக்கறிஞர்களின் பொற்பாதங்களை வணங்கி நெஞ்சார்ந்த நன்றியையும், உள்ளார்ந்த பாராட்டுதலையும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கிறோம்.

அதுபோல விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ கொலை வழக்கிலும், வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என விழுப்புரம் வழக்கறிஞர்கள் அறிவிக்க வேண்டும்," எனக் கூறியிருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


"கரோனா விவகாரத்தால் சத்தமே இல்லாமல் இருக்கிற, படுபாதகச் சம்பவமான காசியின் விவகாரத்தை 'நக்கீரன்' மட்டுமே தொடரந்து வெளிக்கொண்டுவருகிறது. நக்கீரன் இணையத்தின் மூலம் பேசிய 'நக்கீரன்' ஆசிரியரின் பேச்சு சாமானியனையும் நரம்பு புடைக்கச் செய்தது. அவர் பேசும் போது, பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அங்குள்ள வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் எனச் சொன்னதுபோல நாகர்கோயில் சம்பவத்திலும் அங்குள்ள வழக்கறிஞர்கள் முடிவெடுத்தால் நல்லது எனக் கூறியிருந்தார். நக்கீரன் ஆசிரியர் அவர்கள் கூறியதும், அதனை ஏற்று இந்த முடிவை வழக்கறிஞர்கள் எடுத்துள்ளதும் பாராட்டுக்குறியது," என்கிறார்கள் கும்பகோணம் வழக்கறிஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மாட்டின் தலையை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி? போலீசார் விசாரணை

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Conspiracy to overturn a train with a cow's head in nagercoil

காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (20-02-24) இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் திடீரென கற்களின் மீதி மோதியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.