Skip to main content

நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து படுஜோராக நடக்கும் போதைப்பொருட்கள் விற்பனை!!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

நாகை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரம் படுஜோராக நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்டு நாகையில் விற்பனை செய்வதற்காக தயார்நிலையில் இருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
 

drugs


நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கீழ்வேளூர், திட்டச்சேரி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. அதில் நாகை டவுன்பகுதியில் நடக்கும் கஞ்சா விற்பனை குறித்த தகவல், நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்கு  கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, ஏ.எஸ்.பி.பி. பத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 தினங்களாக பல்வேறு இடங்களில் ரகசியமாக சோதனை நடத்தினர். அப்போது நாகை வெளிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். 

தர்மன்கோவில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து காவல்துறையினர் சென்றனர். அதற்குள் காக்கிகளில் உள்ள கருப்புக்காக்கிகளின் ரகசிய தகவலால்,  அங்கிருந்த கஞ்சா வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், வேறுமாவட்டத்திற்கு அனுப்பி விற்பனை செய்வதற்காகவும் பொட்டலம் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காக்கிகள் நடத்திய நடத்திய விசாரணையில், கஞ்சாவியாபாரிகள் நாகை சந்தைப்பகுதியை சேர்ந்த ராணியும் அவரது மகன் ஆனந்த் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகிய மூவரும் என்பது தெரியவந்து, வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். 

இதுகுறித்து காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம், "ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி, மதுரை வழியாக ஒவ்வொரு  ஏரியாவாக  பிரித்துக்கொடுத்துவிட்டு இறுதியாக நாகைக்கு வருவதாக தெரியவந்துள்ளது. இங்குவந்து சிறிது சிறிதாக பாக்கெட் போட்டு பல இடங்களில் விற்பனை செய்கின்றனர். தற்போது பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி. இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். "என்கிறார். இந்த சம்பவம் ஒருபுறம் நடக்க அதே நாளில் நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த கஞ்சாவை கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளனர்.

கோடியக்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக சவுக் பகுதியில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டி.எஸ்.பி. களிதீர்த்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்ததில், ஏழு மூட்டைகளில் 150 கிலோவை கைப்பற்றினர். ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் கஞ்சா போதைப்பொருள்களை கைப்பற்றியது பெரும் அதிர்வளையை உண்டாக்கி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.