Skip to main content

ஊரடங்கில் கவனிப்பார் இல்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர்; மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் போலீஸார்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

Women Inspector of Police


கரோனா தடை காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலமை மிகமோசமாகிவிட்டது. உணவு இல்லாமலும் உறவினர்கள் கவனிப்பு இல்லாமலும் போய்விட்டனர். அந்த வகையில் நாகையில் ஆதரவின்றி சுற்றிய பெண் ஒருவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.
 


நாகப்பட்டினம் அடுத்துள்ள அக்கரைபேட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனிமையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாவுக்கு அவரை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் வேம்புவும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விசாரித்ததில் வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட குறிச்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகள் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு கவனமுடன் பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு வந்துள்ளனர்.
 

Women Inspector of Police


இதேபோல கடந்த மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி இருந்த தனலட்சுமி என்ற 65 வயதுடைய மூதாட்டியைப் பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து அவரது ஊரான பனையூருக்குச் சென்று அவரது கனவர் ஆறுமுகத்திடமும் பிள்ளைகளிடமும் கூற அவர்களோ தாயை மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஏற்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஆய்வாளர் கோப்பெருந்தேவி அலட்சியபடுத்தாமல் நீடூரில் உள்ள தனலட்சுமியின் சகோதரி மற்றும் அவரது பெண் பிள்ளைகளிடம் மூதாட்டியை ஒப்படைத்தார்.
 


கரோனாவால் மனிதநேயமும் செத்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் கண்டிப்புடன் ஒப்படைத்துவரும் மனிதநேயமிக்க செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.