Skip to main content

ஊரடங்கில் கவனிப்பார் இல்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர்; மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் போலீஸார்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

Women Inspector of Police


கரோனா தடை காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலமை மிகமோசமாகிவிட்டது. உணவு இல்லாமலும் உறவினர்கள் கவனிப்பு இல்லாமலும் போய்விட்டனர். அந்த வகையில் நாகையில் ஆதரவின்றி சுற்றிய பெண் ஒருவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.
 


நாகப்பட்டினம் அடுத்துள்ள அக்கரைபேட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனிமையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாவுக்கு அவரை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் வேம்புவும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விசாரித்ததில் வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட குறிச்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகள் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு கவனமுடன் பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு வந்துள்ளனர்.
 

Women Inspector of Police


இதேபோல கடந்த மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி இருந்த தனலட்சுமி என்ற 65 வயதுடைய மூதாட்டியைப் பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து அவரது ஊரான பனையூருக்குச் சென்று அவரது கனவர் ஆறுமுகத்திடமும் பிள்ளைகளிடமும் கூற அவர்களோ தாயை மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஏற்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஆய்வாளர் கோப்பெருந்தேவி அலட்சியபடுத்தாமல் நீடூரில் உள்ள தனலட்சுமியின் சகோதரி மற்றும் அவரது பெண் பிள்ளைகளிடம் மூதாட்டியை ஒப்படைத்தார்.
 


கரோனாவால் மனிதநேயமும் செத்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் கண்டிப்புடன் ஒப்படைத்துவரும் மனிதநேயமிக்க செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.