Skip to main content

கடற்களியால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மீனவர்கள்! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் கடலில் உள்ள ‘கடற்களி’ கரை ஒதுங்கி, கடற்கரை முழுவதும் வண்டல் நிரம்பிய பகுதியாக மாறியதால் மீனவர்கள் தங்களின் படகுகளை கடலுக்கு எடுத்து செல்லமுடியாத கையறு நிலையில் தவித்துவருகின்றனர்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மிகவும் பசுமையான கிராமம் புஷ்பவனம். ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்த கஜா புயலால் பசுமை முழுவதும் சிதிலமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அது துளிர்விட்டுவருகிறது. அதே கிராமத்தில் கடற்கரையோரம் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. 150க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை கொண்டு மீன்பிடி தொழிலிலை செய்து ஜீவனம் செய்துவருகின்றனர். மீனவ கிராமங்களிலேயே மிகவும் பின்தங்கிய கிராமமமாக இருந்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பேரழிவை சந்திப்பதால் அந்த மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லை. கஜா புயலின்போது கடற்களி குடியிருப்புவரை புகுந்து அவர்களை திணறடித்தது. படகுகள் முழுவதும் கடற்களியில் முழ்கியதால் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. 

 

அதுபோலவே சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் கடற்கரை பகுதியில் கடலில் உள்ள கடற்களி கரை முழுவதும் ஒதுங்கி சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு நடமாடவே முடியாத நிலையாகிவிட்டது. அதோடு மழை காலத்திற்காக மீனவர்கள் கரையோரமாக நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகளை கூட தற்போது மீன்பிடி தொழிலுக்கு எடுக்கமுடியாத கையறு நிலையில் தவிக்கின்றனர். படகுகள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து கடல்வரை சுமார் 300 மீட்டர் தூரம்வரை கறையோரம் கடற்களி குவிந்திருப்பதால் வண்டல் நிலம்போல மாறி பைபர் படகுகளை நகர்த்த முடியாமல் தவிக்கின்றனர். வழக்கமாக ஒரு இன்ஜினோடு நகர்த்திய படகுகள் தற்பொழுது  இரண்டு இன்ஜின்களை பொருத்தியும் கடற்களியில் நகர்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கூட்டமாக சென்று ஒரு பைபர் படகை போராடி 100 மீட்டர் தூரம் தள்ளி செல்வதற்குள் சோர்வடைந்து ஏமாற்றத்தோடு கரை திரும்புகின்றனர். 

 

அங்குள்ள மீனவர்கள் கூறுகையில், "உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் உள்ள கடற்களியை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால் குடும்பத்தோடு வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். கடலுக்கு செல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதித்துவிட்டது. இதுவரையில் எந்த ஒரு அதிகாரிகளும் எங்களை வந்து பார்க்கவில்லை" என கண்ணீர் மல்க கூறுகிறார்கள். 

 

"மீனவர்களின் வாழ்வு என்பதே தினம் தினம் செத்துபிழைக்கும் நிலைதான். புயல், பெருமழை, உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாண்டி இலங்கை உள்ளிட்ட அன்னியநாட்டு கடற்படைகளாலும், கடற்கொள்ளையர்களாலும் தினம் செத்துபிழைக்கின்றனர். தினசரி ஏதாவது ஒரு பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் என பாதிப்புகள் வாடிக்கையாகிவிட்டது. அதோடு இப்படி பட்ட இடற்பாடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி போடுவது வேதனை அளிக்கிறது. அரசு உடனே கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும்" என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.